கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

சென்னை, மார்ச்16- மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜுலை மாதம் திறந்து வைத்தார். சுமார் 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த நூல கத்தில் முதல் கட்டமாக 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணா நூலகத்தை விட கலைஞர் நூலகம் கட்டட அளவிலும், புத்தக எண்ணிக்கையில் குறை வாக இருந்தாலும், கலைஞர் நூலகத்தின் வசதிகள் நவீன காலத்திற்கு ஏற்றபடி உள்ளது. கலைஞர் நூலகம், தமிழ் நகரின் களஞ்சியம். கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்ட 100 நாட்களுக்குள், சுமார் 2 லட்சம் பேர் நூலகத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு’ நூலகத் திற்கு வந்து சென்றவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்துவிட்டதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மகிழ்ச்சியுடன் சொன்னார். தென் மாவட்ட மக்களுக்கான ‘அறிவு ஆலய’மாகத் திகழ்கிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *