நாகை, மார்ச் 15- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேரையும் படகுகளுடன் கைது செய்துள்ளது. காங்கேசன் நகர் துறைமுகத்தில் வைத்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழுமலையான் எங்கே போனார்?
திருப்பதியில் நிலநடுக்கம்
திருப்பதி, மார்ச் 15 வடகிழக்கு தமிழ் நாட்டு எல்லையான ஆந்திராவின் திருப் பதி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அலகில் 3.9-ஆக பதி வானதால், எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என்று திருப்பதி மாவட்ட ஆட்சியர் லட்சுமி ஷா தெரிவித்தார்.
திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டா மண்டலத் துக்கு உட்பட்ட பிச்சிரெட்டி தோப்பு, மங்கபதி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று (14.3.2024) இரவு சுமார் 8.43 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்த அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து, வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சுமார் 5 விநாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அலகில் 3.9-ஆக பதிவாகி உள்ளது. மிக லேசான இந்த நிலநடுக்கதால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று திருப்பதி மாவட்ட ஆட்சியர் லட்சுமி ஷா தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் எந்த அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி வேறு எங்காவது நில நடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது பொதுமக்கள் தங்களது வீடுகளில் தங்க பயப்பட்டாலோ 0877-2236007 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.