இதுதான் மோடியின் ‘மேக் இன் இந்தியா’வா?

1 Min Read

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்
புதுடில்லி,மார்ச் 14- ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8% ஆக உள்ளது. இந்தப் பட்டியலில் 2ஆம் இடத்தில் சவூதி அரேபியா (8.4%), கத்தார்(7.6%), உக்ரைன் (4.9%), பாகிஸ்தான் (4.3%), ஜப்பான் (4.1%),எகிப்து (4%), ஆஸ்திரேலியா(3.7%), தென்கொரியா (3.1%), சீனா (2.9%) உள்ளன.
அதிகபட்சமாக ரஷ்யாவிடமிருந்து 36% இறக்குமதி செய்கிறது. பிரான்சிடமிருந்து 33%, அமெரிக்காவிட மிருந்து 13% இந்தியா இறக்குமதி செய்கிறது. 2018-22 ஆண்டில் இந்தியாவின் இறக்குமதி உலக மொத்த ஆயுத விற்பனையில் 11 சதவீதமாக இருந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சி
நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 14- குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மார்ச் 15ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) மூலம் மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், முசுலிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும், இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 15ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *