ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உடனடியாக பதவி தருவது நீதித்துறைக்கு தலைகுனிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து

கோட்டயம், மார்ச் 12- முக்கியமான வழக்குகளில் ஒன்றிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பல நீதிபதிகள் உடனடியாக புதிய பதவி நியமனம் பெற்றுள்ளனர். இது நீதித்துறையின் பாகுபாடற்ற தன்மையைக் குறை மதிப்பிற்கு உட் படுத்தி தலைகுனிவை ஏற்படுத்து கிறது என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.
கேரளம் மாநிலம் கோட்ட யத்தில் தர்ஷன் சன்ஸ்காரி கேந் திரா ஏற்பாடு செய்திருந்த சொற் பொழிவில், “இந்தியக் குடியரசு மீட்பு” என்ற தலைப்பில் அவர் பேசுகையில் மேலும் கூறியதாவது:
சுயமாக செயல்படும் நீதிபதி களை நியமிக்காமல் ஒன்றிய அரசு தலையிடுகிறது. முஸ்லிம் நீதிபதி கள் நியமிக்கப்படவில்லை.
நீதிபதிகள் புலனாய்வு அமைப் புகளால் கண்காணிக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, அரசுக்கு ஏற்ற வாறு தீர்ப்புகளை உருவாக்கு கின்றனர். நீதித்துறை ஊழலில் இருந்து முற்றிலும் விடுபட்டது என்று கூற முடியாது.

வாக்கு இயந்திரங்களில் முறைகேடு
உச்சநீதிமன்றத்தில் இருந்தும், முக்கியமான பிரச்சினைகளில் நடு நிலையான தீர்ப்புகள் வருகின்றன. இத்தகைய தீர்ப்புகளில் மேலும் செல்வாக்கு செலுத்த இந்த நிய மனங்கள் ஒரு ‘கருவியாக’ மாறக் கூடும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப் பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதாகும்.
ஊடகங்களில் விளம்பரம் செய்து, பணம் மற்றும் செல்வாக் குடன் தேர்தல் முடிவுகள் வாங்கப் படுகின்றன. ஊடகங்கள் மோடி ஊடகமாக மாறி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *