மாநிலங்களவை : 225 உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி

1 Min Read

புதுடில்லி, மார்ச் 3 தேர்தல் சீர்திருத்த அமைப்பான “ஜனநாயக சீர்திருத்த சங்கம்” (ஏடிஆர்), “நேஷனல் எலெக் சன் வாட்ச்” ஆகிய இரு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில், நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களான 225 பேரின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,” ஒவ்வொரு உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.87.12 கோடியா கும். பணக்கார மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பாஜகவின் 90 பேரில் 9 பேர், காங்கிர சின் 28 பேரில் 4 பேர், ஒய்எஸ்ஆர் காங்கி ரசின் 11 பேரில் 5 பேர், ஆம் ஆத்மியின் 10இல் 2 பேர், பிஆர்எஸின் 4 பேரில் 3 பேர், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 6 பேரில் 2 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *