வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும்: ராகுல் காந்தி

1 Min Read

புதுடில்லி,பிப்.21- இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும் என காங்கிரஸ் கட்சி மேனாள் தலை வர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, நரேந்திர மோடியின் இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர் மற் றும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கு இடமில்லை.

நாட்டின் நிதிநிலை அறிக் கையில் ஒவ்வொரு ரூ.100க்கும், மூன்றில் இரண்டு பங்கு மக்களின் பங்கு வெறும் ரூ. 6 மட்டுமே. இந்த வகுப்பினருக்கு இழைக்கப்படும் கொடூரமான அநீதி, நாட்டை உள்ளிருந்து குழிபறிக்கிறது.
எனவே, நாட்டைப் பலப்படுத் தும் நோக்கில் காங்கிரஸ் இரண்டு புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. முதல் படி ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு, இது நாட்டின் எக்ஸ்ரே ஆகும்.
இரண்டாவது படி செல்வ வளங்களின் வரைபடமாகும், இது யாரிடம் என்ன, எவ்வளவு உள் ளது என்பதை அறிய உதவும். பின்தங்கிய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரை நாட்டின் முன்னேற்றத்தில் பங்காளியாக் காமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமற்றது. இந்தியாவைக் கட்டியெழுப்பு பவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித் தளமிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *