உண்மையான தேச பக்தி எது? ராகுல் காந்தி வினா

1 Min Read

லக்னோ பிப் 18- நாட்டை ஒன்றிணைப்பதே உண்மையான தேசபக்தி என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். உத்தரப் பிர தேசத்தில் இரண்டாவது நாளாக வாரணாசியில் இந்தியா ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற் கொண்டு வரும் ராகுல் ஜீப்பில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந் தார்.
குடாலியா பகுதியைச் சுற்றிப்பார்த்த ராகுல் அங்குள்ள மக்களை சந் தித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது, இந்தியா அன்பின் நாடு, வெறுப் பின் நாடு அல்ல. மக்களி டையே நடைபெறும் மோதலால் நாடு பலவீன மாகிவிடும். உண்மை யான தேசப் பற்று என் பது நாட்டை ஒன்றி ணைப்பதாகும். நாட்டில் பணக்கார்க ளுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என்று இரண்டு இந்தியா செயல் படுகிறது.
-விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை காட்டு வதற்குப் பதில் ஊடகங் கள் பிரதமர் மோடியை யும், அய்ஸ்வர்யா ராயை யும் காண்பித்து வருகின் றது.
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் மட்டுமே நாட்டில் உள்ள இரண்டு பிரச்சனைகள் இவ்வாறு அவர் பேசினார்.
ரேபரேலியில் நடை பெறும் யாத்திரையில் தானும் கலந்து கொள்வ தாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நடைப்பயணமா னது உத் தரப் பிரதேசம் வழியாக ராஜஸ்தானுக் குள் நுழைய உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *