அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை சிதைத்துள்ளது பாஜக : ராகுல் காந்தி

1 Min Read

இந்தியா

தோல்பூர்,நவ.23- அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம் பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக வும் கடுமையாக மோதி வருகின்றன.

தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளதால், இரு கட்சி களின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் ராஜஸ்தா னின் தோல்பூரில் 22.11.2023 அன்று நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, “நாட் டின் வளங்கள் எவ்வாறு பகிரப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியமாகும். அந்த வகையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வ தற்கு ஜாதிவாரி கணக்கெ டுப்பு மிகவும் அவசிய மாகும். 

ராஜஸ்தானில் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத் தப்படும். அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 

முன்பு தன்னை ஓபிசி என அடையாளப்படுத்தி வந்தார் பிரதமர் மோடி. நான் ஜாதிவாரி கணக்கெ டுப்பை வலியுறுத்த தொடங் கியபின்பு தற்போது நாட் டில் ஏழை என்ற ஒரே ஜாதி மட்டுமே இருப்பதாக மாற்றிப் பேசி வருகிறார்.

கோடிக்கணக்கில் நிரந்தர வேலைவாய்ப்பு களை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக இருக்கும் வேலை வாய்ப்புகளையும் குறைத்து வருகிறது. 

நாட்டைக் காப்ப தற்காக கனவுடன் இருந்த இளைஞர்களின் கனவு களை அக்னிபாத் திட்டத் தின் மூலம் பாஜக சிதைத் துள்ளது.” என்று ராகுல் காந்தி பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *