சிதம்பரம் கழக மாவட்டம், புவனகிரி நகர கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிர்வாதம் அவர்களின் மூத்த மகன் ஆ.இ.ராஜேந்திரன் (வயது 52) 3.10.2023 அன்று உடல் நலமின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மறைவுற்ற ராஜேந்திரனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட கழக செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட இணை செயலா ளர் யாழ் திலீபன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.நெடுமாறன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய தலைவர் ஏ.பி.ராமதாஸ் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். மகனை இழந்து வாடும் பெரியார் பெருந் தொண்டர் ஆசிர்வாதத்திற்கு ஆறுதல் கூறினர்.
மறைவு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books