சிலையை வைத்து மதக் கலவரம் இதுதான் பா.ஜ.க.வின் யுக்தி

viduthalai
2 Min Read

அகர்தலா, பிப்.16 மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள நிலை யில் பாஜக ஆளும் வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான திரிபுராவில் சரஸ்வதி சிலை மூலம் மத வன் முறையை தூண் டும் முனைப்பில் களமிறங்கி யுள்ளது ஆர்எஸ்எஸ் – பாஜக.

கிறிஸ்தவப் பள்ளியில் பூஜை செய்ய மிரட்டல்
திரிபுராவின் கோமதி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ் தவ மிஷனரி பள்ளிக்குள் ஆர்எஸ்எஸ் கும்பல் நுழைந்து, பள்ளியில் சரஸ்வதி பூஜை நடத்துமாறு மிரட்டியுள் ளது. கிறிஸ்தவ பள்ளிக்குள் ஏன் பூஜை நடத்த வேண்டும் என பள்ளி யின் தாளாளர் கேள்வி எழுப்பிய நிலையில், தாளாள ருக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளது ஆர்எஸ்எஸ் கும்பல்.

மிரட்டலைத் தொடர்ந்து பள்ளி யின் தாளாளர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் ஆர்.கே.நகர் காவல்துறையினர் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு, புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் பள்ளியின் தாளாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை யை தொடங்க ஆர்.கே.நகர் சரக காவல்துறைக்கு உத்தரவிட் டார். அதன்பிறகே வழக்குப் பதிவு செய்த ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் பாபுல் தாஸ், “விஷயத்தை பெரி தாக்க வேண்டாம் என்றும், தேவை யான நடவடிக்கைகளை எடுப் போம்” என மழுப்பலாகக் கூறியுள்ளார்.

சிலையை தாங்களே நிறுவி வன்முறையை தூண்டிய ஆர்எஸ்எஸ் – பாஜக
திரிபுராவின் தலைநகர் அகர் தலாவில் உள்ள அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் சரஸ்வதி சிலை ஒன்று நிறுவப் பட்டது. ஆர்எஸ்எஸ் – பாஜக வைத்த இந்த சரஸ்வதி சிலை ஒரு சாயலில் கிறிஸ்தவ மதத்தின் இயேசு நாதர் அல்லது மாதா சிலை போன்று இருந்தது. அடுத்த சில மணிநேரங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் சிலை வடி வம் வேறு மாதிரியாக உள்ளது என்றும், இது சரஸ்வதி சிலை அல்ல என்றும், இந்து மதத்தை புண்படுத்துவதாக உள்ளது எனக் கூறி, கல்லூரியின் நுழைவு வாயில் போராட்டம் நடத்தி வன் முறை பதற்றத்தை ஏற்படுத்தினர்.
சிலை நிறுவியது தங்கள் கும்ப லைச் (ஆர்எஸ்எஸ் – பாஜக) சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும், மக்களவை தேர்த லுக்கான அரசியல் ஆதாயத் திற்காக ஏபிவிபி போராட்டம் நடத்தியது கடும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *