சென்னை மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறைத் தலைவர் மற்றும் மேனாள் பேராசிரியரும், மனநல பயிலக மேனாள் கண் காணிப்பாளருமாகிய டாக்டர் ஓ.சோமசுந்தரம் (வயது 98) கடந்த 13.2.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான திவான் பகதூர் ஓ.தணிகாசலம் (செட்டியார்) மகன் ஆவார். சென்னை பெரியார் திடலில் டாக்டர் ஓ.சோமசுந்தரம் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டு சிறப்பு செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
– ஆசிரியர்,
கி.வீரமணி