கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

14.2.2024
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை தலைநகர் டில்லி குலுங்கியது: டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு; 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது; 144 தடை; துணை ராணுவம் குவிப்பு; தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம் வலுப்பதால் ஒன்றிய அரசு கலக்கம்.
* தமிழ்நாடு ஆளுநர் சட்டசபையில் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்கிறது தலையங்க செய்தி.
* மோடி அரசு அறிவித்த பாரத் ரத்னா விருதுகளால் ஒரு பலனும் பாஜகவிற்கு ஏற்படாது என்கிறார் அரசியல் விமர்சகர் பர்சா வெங்கடேஸ்வர ராவ் ஜூனியர்.
* ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொன்ன மோடி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது என சித்தராமைய்யா தாக்கு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* சட்டசபையில் நீக்கப்பட்ட பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினையை காங்கிரஸ் எழுப்பியது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதல் உத்தரவாதம்’: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை நிறைவேற்றுவது எங்களின் முதல் உத்தரவாதம் என்கிறது காங்கிரஸ்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *