‘இந்தியா’ கூட்டணி எங்களுக்கு சவால்தான் ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, அக்.8- ‘இந்தியா’ கூட் டணி உண்மையிலேயே சவாலா னதுதான். எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஒன்றிய அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- பார திய ஜனதாவோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள் வது இல்லை. அடிமட்ட தொண் டர்கள் முதல் மேலிட தலைவர்கள் வரை ஒவ்வொரு தேர்தலையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். 

பிரதமர் மோடி எங்களை முன் வரிசையில் நின்று வழிநடத்து கிறார். 2024ஆ-ம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலை பொறுத்தவரை, பிரதமர் மோடி 3ஆ-வது தடவை யாக நாட்டுக்கு சேவையாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் செயல் திட்டம்.

எதிர்க் கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி, பா.ஜனதாவுக்கு உண் மையிலேயே சவாலானதுதான். மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரான நான், இத்தேர்த லில் ஒடிசாவில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவை நிறைவேற்றி, தாய்மார் களுக்கும், சகோதரிகளுக்கும் அதி காரம் அளிப்பதில் பிரதமர் மோடி முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார். மகளிர் மசோதாவை காங்கிரஸ் கட்சி காலாவதி ஆக செய்து விட்டது.

தனது ஆட்சிக்காலத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அதன் கைகளை யாரும் கட்டிப் போடவில்லை. மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பு இருந்தபோ திலும், அவர்கள் அதை செய்ய வில்லை. நாடுதழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள் ளார்.

கடந்த 75 ஆண்டுகளில், அவரது குடும்ப கட்சி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், நலிந்த பிரிவினருக்கும் என்ன செய்தது என்பதை சொல்ல தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *