சென்னையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தனி வாகனத்தில் 23.12.2023 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (24.12.2024) மதுரைக்குச் சென்றன.
தோழர் சே.முனியசாமி 100 போர்வைகள், 100 சேலை கள், 250 கைலி, 700 பிரட், 1000 பிஸ்கட், 1000 தண்ணீர் பாட்டில்கள், 5 உள்ளாடைகள் என ரூ.39,000 மதிப்பிலான பொருட்களையும், தோழர்கள் அ.முருகானந்தம், நா.கணே சன், மணிராஜ், சுப்பையா, முனைவர் வா. நேரு, ஓய்வு பெற்ற (ஏஇஓ) சோ.பால்ராஜ், சண்முகசுந்தரம், போட்டோ ராதா, பேக்கரி கண்ணன், எல்.அய்.சி. மோதிலால், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் சார்பில் மொத்தமாக ரூபாய் 30,500 மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும், மதுரை தோழர் அழகுபாண்டி 10 கைலி, அய்ந்து நைட்டி ஆகியவற்றையும் சேகரித்து வைத் திருந்தனர். அவற்றையும் ஏற்றிக் கொண்டு அன்று மாலை தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் பெரியார் பெருந்தொண் டர் காசி வசம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்த பெரியார் தொண்டறம் அணி தோழர்களின் உதவியுடன் தேவைப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மதுரை-வெள்ள நிவாரணப்பொருட்கள்
Leave a Comment