கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

5.2.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ வேலையின்மைக்குக் காரணம் மோடி தான்; கடந்த பத்தாண்டு மோடி ஆட்சி அநியாய காலம் என ராகுல் தாக்கு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட வற்புறுத்திய மோடி அரசின் அமைச்சர் மீனாட்சி லேகி. அமைதி காத்த பார்வையாளர்களைக் கண்டு எரிச்சல் அடைந்தார். முழக்கம் எழுப்புவதில் பங்கேற்கத் தயங்கும் பெண்ணை வெளியேற வேண்டும் என பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுகிறார்கள் ,ஜனநாயக நிறுவனங்களை பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:
♦ ஜார்க்கண்ட் மாநிலத்தில் 19 ஆண்டுகளாக பாஜகவும் வெளியாட்களும் கனிம வளங்களை கொள்ளையடித்து வந்தனர். இதனைத் தடுத்த காரணத்திற்காக ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது மோடி அரசு என ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ மோடி அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை அணிதிரட்ட கருநாடக காங்கிரஸ் கட்சி திட்டம். கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோ சகர் பசவராஜ் ராயரெட்டி கூறுகையில், “தென் மாநிலங்க ளின் பொருளாதாரக் கூட்டணி” அமைக்கும் திட்டம் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *