தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

2 Min Read

சென்னை,பிப்.5 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப் பதாவது:-
நாகை மாவட்டம், வேதா ரண்யத்தை அடுத்த ஆறுக் காட்டுதுறையிலிருந்து தமிழ் நாடு மீனவர்கள் அய்ந்து பேர் பிப்ரவரி 2, 2024 அன்று நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த போது இலங்கை கடற் கொள்ளையர்கள் நமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்களிட மிருந்த ஜி.பி.எஸ். கருவிகள், அலைபேசி, கடிகாரம், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற் றையும் கொள்ளையடித்துக் கொண்டு அடித்து விரட்டியுள் ளனர்.
காயம் அடைந்த 5 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைவெறித் தாக்கு தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கெனவே இலங்கை கடற் படையினர் தமிழ்நாடு மீனவர் களை சுட்டுக் கொல்வது, கட லில் மூழ்கடிப்பது, அடித்து துன்புறுத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி சாதனங்களை நாசமாக்குவது போன்ற தொடர் தாக்குதல் களைத் தொடுத்து வருகிறது.

இதனால் பெரும் துயரங் களையும், அச்சுறுத்தல்களையும் தமிழ்நாடு மீனவர்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர் களாலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது வேதனைக்குரி யது.

இதனால் தமிழ்நாடு மீன வர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படுவதோடு, உயிருக்கும், உட மைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்ச்சியான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டுமென ஒன்றிய பா.ஜ.க. அரசை தொடர்ந்து வலியுறுத்தினாலும் தமிழ்நாடு மீனவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று ஒரு சிறுதுரும்பைக் கூட அசைக்க மறுத்து தமிழ்நாடு மீனவர்களையும், மக்களையும் வஞ்சித்து வருகிறது.

இதுவே இதுபோன்ற தொடர் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு இனியாவது தமிழ்நாட் டிற்கு விரோதமான போக்கை கைவிட்டு, இதுபோன்ற தாக்கு தல்கள் நடைபெறாமல் இருப் பதற்கும், தமிழ்நாடு மீனவர் களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கும், மீனவர்களின் உயிருக்கும், உட மைகளுக்கும் பாதுகாப்பு அளிக் கவும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடவும் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக் கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது.

-இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *