பி.ஜே.பி. ஆட்சியில் தான் மீனவர்கள் கைது அதிகம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்!

viduthalai
2 Min Read

சென்னை, பிப். 3- இலங்கை கடற் படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் என்ன? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (சி.பி.எம்) எழுப் பிய கேள்விக்கு (எண் 44/02.02.2024) வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் பதில் அளித்துள் ளார்.
அதன்படி பா.ஜ.க. ஆட்சியில் உள்ள 2014 -20 24 காலத்தில் 3137 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட் டுள்ளனர். 2004 – 2013 காலத்தில் 2915 பேரும் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003இல் 606 பேர் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்கு தல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. அண்டை நாட்டு சிறைகளில் விடு விக்கப்படாமல் தற்போது இருப் பவர்கள் 266 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005இல் மட்டுமே ஒரு தாக்கு தல், கைது கூட இல்லை. கைது, தாக்குதல் பற்றிய தகவல் வந்த வுடன் இந்திய அரசு ராஜீய உறவுகள் வாயிலாக தொடர்பு கொண்டு விடுவிக்க முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன.
தூதரக பணியாளர்கள் சிறைக ளுக்கு சென்று கைதிகளின் பாது காப்பு, நலம் விசாரிக்கப்படுகின்றன. சட்ட உதவிகள் செய்யப்படு கின்றன. இரு தரப்பு தீர்வு முறை மைகள் உள்ளன. மீனவர் பிரச் சினையை மனிதாபிமான அடிப் படையில் பலவந்தம் இல்லாமல் அணுகுமாறு அண்டை நாடு களின் அரசுகளை கேட்டுக் கொள்வ தாகவும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் கருத்து
அரசு புள்ளி விவரங்களையும், வழக்கம் போல அலுவல் ரீதியான வார்த்தைகளை மட்டுமே பிரகி யோகித்துள்ளது. அரசியல் உறுதி யுடன் நடவடிக்கை தேவைப் படுகிறது.
ஆனால் காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதானவர் களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வருந்தத் தக்கது.
ஆகவே இரு தரப்பு ஒப்பந்தம் உணர்வுப் பூர்வமாக நிறை வேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *