அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கோயிலா?

1 Min Read

காரைக்குடி, பிப். 1- காரைக்குடி கழனி வாசல் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் தமிழ் நாடு அரசு விளையாட்டுத்துறை சார்பில் புதிதாக அமைக்கப் படவுள்ள விளையாட்டு அரங்கத்தில் சட்டவிரோதமாக அரசு ஆணைக்கு புறம்பாக வழிபாட்டுத் தலம் உள்ளது.

அதை அகற்ற வலியுறுத்தி காரைக்குடி கழக மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் கொரட்டி வீ.பாலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் காரைக்குடி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியர் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் ஆகியோர்களுக்கும் புகார் மனு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *