லண்டனுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை

1 Min Read

சென்னை, ஜன.31 விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மய்ய வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சிலையினை 2024 மே மாதத்தில் நிறுவவுள்ளது.
அச்சிலையினை வழியனுப்பும் விழாவில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம், லண்டன் உலகத் தமிழர் வரலாற்று மய்யம் சார்பில், தமிழறிஞர் சிவாப்பிள்ளை அவர்களிடம் அய்ந்தரை அடி உயரமுள்ள திருவள்ளுவர் கற் சிலையை ஒப்படைத்தார். இவ்வழியனுப்பும் விழாவில், ஞானம் சிவாப்பிள்ளை மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜிபி ராஜாதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *