பேச்சுவார்த்தையில் உடன்பாடு அரசு மருத்துவர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனார்

Viduthalai
2 Min Read

அரசியல்

மதுரை, அக் 13  தலைமைச் செயலகத்தில் நேற்று (12.102.023) சுகாதாரத்துறை அமைச்சர் நடத் திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டத் தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். 

மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து, அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் கர்ப்பிணி பெண்கள், அடிக்கடி சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழப்பதாக சர்ச்சை எழுந்தது. கடைசியாக மூன்று கர்ப்பணி பெண்கள் உயிரிழந்ததாக நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள், மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்துக்கு புகார் கடிதம் அனுப்பினர். அவர்,நேரடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை மகப்பேறு வார்டில் நுழைந்து விசாரிக்கவே, அதற்கு மருத்துவமனை மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நகர்நல அலுவலர் வினோத், மாவட்ட ஆட்சியர் சங்கீதா கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர் விசாரணை மேற்கொண்டு, நகர்நல அலுவலர் கூறிய குற்றச் சாட்டுகள் உண்மை என்றும், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப் பதற்கு காரணமான அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘டீன்’ ரெத்தினவேலுவிடம் வலியுறுத்தியுள்ளார். அவர், நட வடிக்கை எடுக்காததால் அதிருப் தியடைந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சுகாதாரத் துறை செயலர் கவனத்துக்கு கொண்டு செல்லவே, சுகாதாரத்துறையை சேர்ந்த மூவர் குழு, நேரடியாக மதுரை வந்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள், நகர்புற ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் களிடம் விசாரித்தனர். 

அதிருப்தியடைந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு ராஜாஜி மருத்துவமனை மருத் துவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை அறிவித்தது. கடந்த ஒரு வாரமாக அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை முதல் தமிழ்நாடு முழுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் குடும்ப நல அறுவை சிகிச்சைகளையும் நிறுத்தி மருத் துவர்கள் போராட்டத்தில் ஈடுபடு வதாக தமிழ்நாடு அரசு மருத் துவர்கள் சங்கம் அறிவித்தது. அறுவை சிகிச்சைகளை நிறுத்தி னால் கர்ப்பிணி பெண்கள் பாதிக் கப்படும் அபாயம் ஏற்பட்டதால் நேற்று (12.10.2023) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மக்கள் நல் வாழ்வுத் துறை செயலர் தலைமையிலான குழுவினர், தலைமை செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் செந்தில், அதன் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத் தியது. இதில் மகப்பேறு மருத் துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக உள்பட சில கோரிக்கைளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அத னால், சமுகமாக தீர்வு காணப் பட்டதாக கூறி உடனடியாக நேற்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை மருத்துவர்கள் திரும்பப் பெற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *