‘அயோத்தியில் பிரமாண்ட ராமன் கோயில் கட்டுவதற்கு இதுவரை ரூ.1,100 கோடி செல விடப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளை நிறைவு செய்ய மேலும் ரூ.300 கோடி தேவைப்படும்’ என்று சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை யின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார்.
மேலும், அயோத்தி ராம ஜென்மபூமியில் தற்காலிகக் கூடாரத்தில் வழிபடப்பட்டு வந்த பால ராமனின் சிலை, கோயில் கருவறையில் புதி தாக நிறுவப்பட்டுள்ள சிலைக்கு முன்பாக வைக் கப்படும் என்று அவர் கூறினார்.
அயோத்தி ராமன் கோயிலில் 51 அங்குலம் உயர முள்ள மூலவர் பால ராம ரின் சிலை பிராணப் பிரதிஷ்டை நேற்று (22.1.2024) நடைபெற்றது.
முன்னதாக, கோயில் கரு வறையில் நிறுவுவதற்காக பால ராமனின் 3 சிலைகள் வடிக்கப்பட்டு, அதில் பரி பூரணமான ஒரு சிலை தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி, மைசூரைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலை ஞர் அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வானது. இச்சிலை கோயில் கருவ றைக்கு கொண்டுவரப்பட்டு, கடந்த வாரம் நிறுவப்பட் டது.
இந்நிலையில், ராமன் கோயில் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை யின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி, பிடிஅய் செய்தியாளருக்கு பேட்டி யளித்தார்.
அப்போது, கருவறையில் நிறுவ தேர்வு செய்யப்படாத இதர இரு சிலைகளும் முழு மரியாதையுடன் கோயிலில் வைக்கப்படும் என்று குறிப் பிட்ட
அவர்,
‘நாங்கள் அளித்த வழி முறைகளின் படி, மூன்று சிலைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன. 4-5 மாதங்களில் அவை வடிக்கப்பட்டன. மூன்று சிலைகளுமே மிக அழகாக இருந்ததால், அதில் ஒன்றைத் தேர்வு செய்வது மிகக் கடினமான பணியாக இருந்தது. குழந்தைத் தன்மையுடன் தெய் வீகப் பொலிவு பொருந்திய தாக முக அமைப்பு இருக்க வேண்டும்; ராமன் ‘ஆஜானு பாகுவானவன்’ என்பதால், கிட்டத்தட்ட முழங்காலை எட்டும் வகையிலான நீளத்தில் கரங்கள் அமைய வேண்டும். இத்தகைய அம் சங்களின் அடிப்படையில், துல்லியமான வடிவிலிருந்த சிலை தேர்வு செய்யப் பட்டது’ என்றார்.
அயோத்தியில் இது வரை தற்காலிகக் கூடாரத் தில் வழிபடப்பட்டு வந்த பால ராமனின் சிறிய சிலை குறித்த கேள்விக்கு, ‘5-6 அங் குலம் உயரமுடைய அந்தச் சிலை மிக முக்கியமானது; அது மிகச் சிறியது என்ப தால்தான், புதிய சிலை வடிக்கப்பட்டது. கருவறை யில் தற்போதைய ராமன் சிலைக்கு முன்பாக அச் சிலை வைக்கப்படும்’ என் றார்.
ராமன் கோயில் கட்டு மானத்துக்கான செலவு மற்றும் எஞ்சியுள்ள பணிகள் குறித்து பேசிய அவர், ‘ராமன் கோயில் கட்டுமானத் துக்கு இதுவரை ரூ.1,100 கோடி செலவிடப்பட்டுள் ளது. எஞ்சியுள்ள கட்டு மானப் பணிகளை நிறைவு செய்ய மேலும் ரூ.300 கோடி தேவைப்படும் என எதிர் பார்க்கிறோம்’ என்றார்.