ஜூடோ கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டு மாணவர்கள்

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ 24 – பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறீநகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்ட 3 தமிழ்நாடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

அதன்படி தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். மேலும் கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி சவுமியா வெண்கலம் வென்றார். பதக்கம் வென்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *