கர்ப்பிணிகள், குழந்தைகள் கண்காணிப்புக்கு புதிய பிக்மி 3.0 மென்பொருள்

1 Min Read

சென்னை, ஜன. 9- திருவல்லிக்கேனி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை யில் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென் பொருளை பிக்மி 3.0 (PICME 3.0) மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலை மை யில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் நேற்று (8.1.2024) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 6 செவி லியர்களுக்கு மகப்பேறு செவிலிய பயிற்றுநர் சான்றிதழ் வழங்கப்பட் டது.

மகப்பேறு திட்டங்கள் தொடக்கம்
சென்னை மாநக ராட்சி மேயர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை செயலா ளர் ககன்தீப் சிங் பேடி, கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மீனா உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
4 மகப்பேறு திட்டங் கள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.
சுகப்பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் பராமரிப்பு, பயிற்சி பிரிவு, யோகா பயிற்றுவித்தல் தொடர்பான பல்வேறு முயற்சிகள் மேற்கொள் ளப் பட்டுள்ளன.
கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை கண்காணிக்கும் வகையில் பிக்மி 3.0 (றிமிசிவிணி 3.0) எனும் மென் பொருள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட் டுள்ளது.
இதன் மூலம் தமிழ் நாட்டில் ஏற்படுகிற பிரச வங்கள், மகப்பேறு வசதி கள், தொடர் பராமரிப்பு போன்ற பல வகையான தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
இங்கு அறுவை அரங் கங்கள், சிறப்பு வார்டுகள், தீவிரசிகிச்சை பிரிவுகள் என்கின்ற வகையில் மிகப் பெரிய கட்டமைப் புகள் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட் டுக்கு வரவுள்ளன.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *