இந்தியா கூட்டணி தலைவர் 15 நாட்களில் தேர்வு காங்கிரஸ் தலைவர் கார்கே தகவல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.7 டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை யகத்தில் நேற்று (6.1.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைப் பயணத் திற்கான இலச் சினை மற்றும் முழக்கத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.

பின்னர் எதிர்க்கட்சி களின் இண்டியா கூட்டணியின் ஒருங் கிணைப்பாளராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப் பினார்.

அதற்கு கார்கே கூறும்போது, “இந்தக் கேள்வி உங்களில் யார் பெரும் பணக்காரர் (கவுன் பனேகா குரோர்பதி) என்பது போல் உள் ளது. அடுத்த 10 முதல் 15 நாட் களில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அப் போது இதுகுறித்து முடிவு செய்யப்படும். அதுபற்றி கவ லைப்படாதீர்கள்” என்றார்.
அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றார். இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரத மர் வேட்பாளர் பொறுப்புக்கு பொருத் தமானவர் என அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறியிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *