தமிழ் எழுத்துகளால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

2 Min Read

கோவை, ஜன.7- தமிழ் எழுத்து களால் உருவாக்கபட்ட திருவள் ளுவர் சிலை, அறிவுசார் மய் யத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்.
தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் முடிவற்ற திட்டப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம், குறிச்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 52.16 கோடி மதிப்பில் தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப் பட்ட திருவள்ளுவர் சிலை, குறிச்சி குளக்கரையில் அமைக் கப்பட்டுள்ள தமிழர் பாரம்பரிய சிலைகள், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மய்யம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மொத்த மதிப்பு 57.66 கோடி ஆகும்.
இதன் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சி அறிவுசார் மய்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாந கராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் உட்பட பல் வேறு மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக இவற்றைத் திறந்து வைத்ததும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணை யாளர் ஆகியோர் குத்துவிளக் கேற்றி அறிவு சார் மய்யத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டனர்.

மேலும் அறிவு சார் மய்யத் தில் இருக்கும் ஸ்மார்ட் வகுப் பறையில் வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திரையில் மாவட்ட ஆட்சியர் “ஙிமீst கீவீsலீமீs” என எழுதி அவரது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வை யிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பலூன்கள் பறக்க விடப்பட்டது. மேலும் அங்குத் திரண்டிருந்த பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை முன்பு ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்த குறிச்சி பகுதியில் மிதி வண்டி பாதை, நடை பாதை, உணவகங்கள், அலங்கார குடை கள், சிறுவர் விளையாட்டு திடல், பாரம்பரிய சிலைகள் என ஏராளமானவை அமைக்கப் பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உக்க டம் பெரியகுளம் மேற்கு கரை யில் அமைக்கப்பட்டுள்ள அனு பவ மய்யத்தை பார்வையிட்ட னர். இங்கு 3ஞி முப்பரிமாண காணொலி, கோவை மாநகர சிறப்புகளை விளக்கும் வகையில் 3ஞி காணொலி, குழந்தைகள் விளையாட்டு 3ஞி காணொலி ஆகிய கட்டமைப்புகள் ஜிப் லைன், இரண்டு பேர் ஓட்டும் சைக்கிள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியாரும் மாநகராட்சி ஆணையாளரும் இரண்டு பேர் ஓட்டும் சைக் கிளை ஓட்டி பார்த்து மகிழ்ந் தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *