புதுடில்லி, ஜன.6 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவே பாஜக தன்னை கைது செய்ய விரும்புவதாக டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரி வால் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லி அரசு கடந்த 2021-_2022-ஆம் நிதியாண்டில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரை, சிபிஅய், அமலாக் கத் துறை ஆகிய அமைப்புகள் தனித் தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதலமைச் சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங் கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்தநவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் அழைப்பாணை அனுப் பியது. ஆனால்அதனை அவர் ஏற்க வில்லை. இதையடுத்து 3-ஆவது முறையாக கெஜ்ரிவாலுக்கு 3.1.2024 அன்று அமலாக்கத் துறை அழைப் பாணை அனுப்பியது. ஆனால் அத னையும் அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து அமலாக்கத் துறைக்கு அவர் அனுப்பிய கடிதத் தில், “மாநிலங்களவைத் தேர்தல், குடியரசு நாள் விழா ஏற்பாடுகள், அமலாக்கத் துறையின் வெளிப் படைத் தன்மையற்ற மற்றும் பதில் அளிக்காத அணுகுமுறையால் என் னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனக்கு கேள்விப் பட்டியலை அனுப்பி வைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறி யுள்ளார்.
இதைத்தொடர்ந்து டில்லி அமைச்சர் அதிஷி தனது சமூக வலைதளப் பதிவில், “கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வருகிறது. கெஜ்ரிவால் கைது செய் யப்படலாம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் டில்லியில் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: அமலாக்கத் துறையின் அழைப்பாணைகள் சட்டவிரோதமானவை என்று வழக் குரைஞர்கள் என்னிடம் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபடுவதை தடுப்பதற்காக பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது. அழைப் பாணைகள் சட்டவிரோதமானவை என்று அமலாக்கத் துறைக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சட்ட விரோத சம்மன் களை நான் ஏற்க வேண்டுமா? சட்டப்படி சரியான அழைப்பாணை அனுப் பப்பட்டால், நான் அவற்றை ஏற்று செயல்படுவேன். எனது நேர் மையே மிகப்பெரிய சொத்து. எனது நற் பெயரை கெடுத்து என்னை நிலை குலையச் செய்ய அவர்கள் விரும்பு கின்றனர். 8 மாதங்களுக்கு முன் சிபிஅய் என்னை அழைத்த போது விசாரணைக்கு ஆஜரா னேன். மக்களவைத் தேர்தலுக்கு முன் எனக்கு ஏன் அழைப்பாணை அனுப்பப்படுகிறது? ஏனென்றால் அமலாக்கத்துறை மூலம் பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக குற்றச்சாட்டு: இது குறித்து பாஜக செய்தித் தொடர் பாளர் பன்சூரி ஸ்வராஜ் கூறும் போது, “தான் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர் அல்ல என்பதை கெஜ்ரிவால் மறந்து வருகிறார். அமலாக் கத் துறை 3 அழைப்பாணைகளை அனுப்பி யுள்ளது. ஆனால் கெஜ்ரிவால் விசாரணையில் இருந்து தப்பி ஓடுகிறார். அவர் விசாரணை யில் உட்படுத்திக்கொள்ள விரும்ப வில்லை” என்றார்.
அமலாக்கத் துறை ஆய்வு: இதற்கிடையில் கெஜ்ரிவால் அனுப் பிய பதிலை அமலாக்கத் துறை ஆய்வுசெய்து வருவதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. விசா ரணைக்கு வருமாறு அவருக்கு
4-ஆவது முறையாக அழைப்பாணை அனுப்பப்படலாம் என கூறப் படுகிறது.