தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட இளைஞரணி சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைப்பெற்றது மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா மாணிக்கவேல் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் கோ.வேலு தலைமையில், மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீ.வெங்கடேசன், அமைப்பாளர் சி.தர்மலிங்கம் முன்னணி ஏற்றனர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.அருணாச்சலம் தொடக்கவுரையாற்றினார். யாழ் திலிபன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கழக பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், ஒன்றிய செயலாளர் ந.கனகராசு, கிளை தலைவர் தங்க.பாஸ்கர், கு.இரத்தினசபாபதி, திருநாவுக்கரசு, தீபக்ராஜ், திராவிடன், பெரியார் மணி மற்றும் தோழர்கள் கலந்துக் கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன் நன்றி கூறினார்.