பா.ஜ.க. அரசின் சாதனை? 5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை: ஒன்றிய அரசு தகவல்

2 Min Read

புதுடில்லி,ஜன.5- கிராமப்புற பகுதிகளில் சுமார் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நிகழாண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களுடன் இணைந்து ‘ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள் விக்கு ஒன்றிய குடிநீர் துறை அளித்துள்ள பதில்:
மாநில பட்டியலின் கீழ், குடிநீர் உள்ளது. குடிநீர் விநியோகம் குறித்த திட்டமிடல், வடிவமைப்பு, ஒப்புதல் மற்றும் அதனை செயல்படுத்தும் திட்டங்கள் மாநிலங்களின் பொறுப்புக்குள்பட்டதாக இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளில் தொழில் நுட்பம் மற்றும் நிதியுதவிகளை வழங்கி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவளித் துள்ளது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை, நாட்டின் 16.81 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில்தான் குடிநீர் இணைப்பு இருந்தது. இந்த விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த டிச.25-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 72.29 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது.

கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்கள்: மேற்கு வங்கத்தில் 40.69 சதவீதம், ராஜஸ்தானில் 45.33 சதவீதம், ஜார்க்கண்டில் 47.57 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில் தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் குடிநீர் இணைப்புள்ள கிராமங்கள் (சதவீதத்தில்)
மிசோரம் – 98.35, அருணாசலப்பிரதேசம் – 97.83, பீகார் – 96.42, லடாக் – 90.12, சிக்கிம் – 88.54, உத்தரகாண்ட் – 87.79, நாகாலாந்து – 82.82, மகாராஷ்டிரம் – 82.64, தமிழ்நாடு – 78.59, மணிப்பூர் – 77.73, ஜம்மு காஷ்மீர் – 75.64, திரிபுரா – 75.25, சத்தீஸ்கர் – 73.35, மேகாலயம் – 72.81, உத்தரப்பிரதேசம் – 72.69, ஆந்திரம் – 72.37, கருநாடகம் – 71.73, ஒடிசா – 69.20, அசாம் – 68.25, லட்சத்தீவு – 62.10, மத்தியப் பிரதேசம் – 59.36, கேரளம் – 51.87

புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு: புதுச்சேரி, தெலங்கானா, குஜராத், கோவா, அந்தமான் நிகோபார், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ, அரியானா, பஞ்சாப், இமாசலப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய குடிநீர் துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *