உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களுடன் சந்திப்பு

viduthalai
1 Min Read

உரத்தநாடு,ஜன.3- புதிதாக அறிவிக்கப்பட்ட உரத்தநாடு வடக்கு ஒன்றிய புதிய பொறுப்பாளர்கள் வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராஜ், ஒன்றிய செயலாளர் ஆ. சுப்பிரமணியன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலாளர். பு. செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல், ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர், ரெ சசிகுமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் தலைமங்கலம் நி.ராமதாஸ், நகர துணைத் தலைவர் மு. சக்திவேல்,நகர இளைஞரணி தலைவர் ச பிரபாகரன் ஆகி யோர் இன்று (3.1.2024) காலை தஞ்சை வல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து பயனாடை அணிவித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து “சிறப்பாக செயல்படுங்கள், அனைத்து ஊர்களிலும் கிளைக் கழகங்களை உருவாக்குங்கள், அனைத்து ஊராட்சிகளிலும் கழகக் கூட்டங்களை நடத்துங்கள், கிராமங்கள்தோறும் ‘விடுதலை’ செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள், சந்தாக்களை திரட்டுங்கள்” என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங் ,மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே .ராஜவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் பேபி ரெ.ரமேஷ், வீதி நாடகக் குழு மாநில அமைப்பாளர் பி. பெரியார் நேசன், தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன், மாநகர செயலாளர் டேவி, பொதுக்குழு உறுப்பினர் ச.மணியன், தெற்கு நத்தம் தோழர் சி அன்பழகன், தஞ்சை மாநகர பகுத்தறிவாளக் கழக செயலாளர் இரா. வீரக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்
தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்க டேசன், உரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பழங்கள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *