வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் நாடு காடாக மாறும்!! கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் எச்சரிக்கை!!

viduthalai
2 Min Read

தேவகோட்டை, ஜன. 2- தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும், நமது உறுதி முழக்கமும் எனும் பொருளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி கழக மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் மாவட்ட தலைவர் கு.வைகறை தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சி.செல்வ மணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, நகர தலைவர் வீர.முருகப்பன், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் ம.முத்தழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் தொடக்க வுரை நிகழ்த்திய பின் கழக சொற் பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார்.
நிறைவாக திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் கருத்துரை வழங்கினார். அவர் தனது உரையில் தந்தை பெரியார் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் பேசிய தனது இறுதிப் பேருரையில் இந்த மக்களை சூத்திரனாக விட்டு விட்டு சாகப்போகிறேனே என கவலைப்பட்டதையும், கோவிலுக் குள் ஒழிந்திருக்கும் ஜாதி என்னும் பாம்பை அடித்து விரட்டிடும் வகையில் அனைத்து ஜாதி மக்க ளுக்கும் அர்ச்சகர் உரிமையை பெற்றுத்தர போராட்டத்தை அறிவித்த பெரியாரின் உரையினை வரலாற்று தரவுகளோடு எடுத்து கூறினார். மேலும் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் ஆணவப் பேச்சு இன் றைக்கும் வெளிப்படும் பார்ப்பனத் திமிரின் உச்சகட்டம் தான். இவர் களை வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற விட்டோம் என்றால் நாடு நாடாக இருக்காது. நாடு காடாக மாறிவிடும்.

இந்தியா கூட்டணி என்பது சமூகநீதியை பாதுகாக்கும் கூட் டணி ஆகும். அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பா.ஜ க.கூட்டணி என்பது சமூகநீதி ஒழிக்கும் கூட்டணியாகும். அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் சொல் வது போல் ஒரே தேர்தல் கடைசி யாக நடக்கவுள்ள இந்த தேர்தல் தான் என்பதையும் நினைவில் கொண்டு வாக்காளர்கள் செயல் படுங்கள் என்று கேட்டுக்கொண் டார். இந்த பரப்புரை கூட்டத்தில் கழக தகவல் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம், தேவகோட்டை ஒன்றிய ப.க. அமைப்பாளர் ந.பாரதிதாசன், காரைக்குடி நகர தலைவர் ந.செக தீசன், காரைக்குடி நகர செயலாளர் தி.க. கலைமணி, தி.மு.க.
மேனாள் நகர்மன்ற உறுப்பினர் ஜாகீர் உசேன், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் அழகய்யா, தொ.மு.ச. செந்தில் குமார், திருமணவயல் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தேவகோட்டை ஒன் றிய கழக தலைவர் வாரியன்வயல் ஜோசப் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *