தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் : ப.சிதம்பரம்

1 Min Read

சென்னை, டிச.27 மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (26.12.2023) வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வைக்கம் போராட்டத் தின் நூற்றாண்டு நிறைவு விழா 28-ஆம் தேதி (நாளை) அன்று சென்னை யில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப் படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் தலை மையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் அந்த போராட்டத்தின் வெற்றிக்கு பிறகே 1936-ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ் தானத்தில் ஆலயப் பிரவேச பிரகடனம் அறிவிக் கப்பட்டது. பெரியாரின் புரட்சி சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளை ஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும். டிசம்பர் 28-ஆம் தேதி காங்கிரஸ் மகாசபையின் தொடக்க நாள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் வைக்கம் போராட்ட நாள் சென்னையில் கொண் டாடப்படும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நாக்பூரில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *