புதுவை – புரட்சிக் கவிஞர் பெயரன் கோ.செல்வம் மறைவிற்கு இரங்கல்!

1 Min Read

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பெயரனும், பாவலர் மன்னர் மன்னன் அவர்களின் மகனும், புதுச்சேரி திராவிடர் கழக இளைஞரணியின் மேனாள் தலைவரும், புதுச்சேரி வானொலி நிலைய மேனாள் உதவி இயக்குநரு மான கோ. செல்வம் (வயது 65) அவர்கள் நேற்று (25.12.2023)மறை வுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
சி

றந்த பகுத்தறிவாளரான செல்வம் குடும்பத்தினருக்கும், மானமிகு கோ. செல்வம் தலைவராகயிருந்த புதுச்சேரி சிந்தனையாளர் பேரவையினர்களுக்கும், தோழர்களுக் கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை. சந்திரசேகரன், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் மானமிகு சிவ. வீரமணி ஆகியோர் கழகத் தோழர் களுடன் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

– கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
26.12.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *