பெரியாரின் பெருங்குணம்!

viduthalai
1 Min Read

சுற்றுப் பயணம் செய்கின்ற இன்றைய அரசியல்வாதிகள், வெளியூர்களில் தங்குவதற்கு, பயணியர் விடுதிகளையோ அல்லது உயர்ந்த ஓட்டல்களையோ நாடுகின்றனர்.
இது அவர்களுக்கு வசதியாகவும், பெருமையாகவும் இருக்கிறது!

தந்தை பெரியார் அவர்கள் வெளியூர் சுற்றுப் பயணம் செய்யும்போது, இப்படி பயணியர் விடுதிகளிலோ, ஓட்டல்களிலோ அவரைத் தங்க வைத்தால் அதை அவர் ஒருபோதும் விரும்புவதில்லை.

அப்படிப்பட்ட ஒரு ஆடம் பரத்தையும் வசதியையும் அவர் வெறுத்து வந்துள்ளார்.
மேலும், கூட்டம் நடத்துகின்றவர்கள் அப்படி அவரைத் தங்க வைத்தால், அது தன்னை மரியாதைக் குறைவாக அவர்கள் நடத்துகிறார்கள் என்று கருதி, அந்த இடங்களில் அவர் வேண்டா வெறுப்போடு சிறிது நேரமே இருந்துவிட்டு வெளியேறுவார்.

ஆனால், கூட்டம் நடக்கும் ஊர்களில் ஊழியர்கள் வீட்டில் தங்குவதையே அவர் பெருமையாக நினைத்து, அதன்படியே பல ஊழியர்கள் வீட்டில் தங்கி இருக்கிறார்.
ஏழை ஊழியரின் குடிசை யாக இருந்தாலும், அங்கே போடப் பட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலிலே தூங்குவதுதான் அவருக்குப் பட்டு மெத்தை பஞ்சணை தரும் சுகத்தை விட பெரிது.
அந்த ஏழை ஊழியர் வீட்டில் பரிமாறப்படும் இட்லிகளை அவர் சுவைத்து உண்பார்.

கழக தோழர்களோடு குடும்பப் பாசத்துடன் பழகியவர் தந்தை பெரியார் அவர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *