பிரதமர் தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் : தொல். திருமாவளவன் கோரிக்கை

viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச.20 தமிழ்நாட்டின் மழை வெள்ளப் பாதிப்பை பிரதமர் ஆய்வுசெய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத் தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள் அண் மையில் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்களான தூத்துக் குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங் கள் முன்னெப் போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர் கொண் டுள்ளன. எனவே, அவசர பேரிடர் நிவாரணம் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசின் உடனடி தலையீடும் மீட்புப் பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் என்டிஆர்எப் பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது.

இதற்கிடையே மீட்புப் பணிகளுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறி விக்க வேண்டும்.
மேலும், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய் யுமாறும் கேட்டுக் கொள்கி றேன். உள்ளாட்சி அமைப்புகளு டன் இணைந்து விரிவான நிவா ரண நடவடிக்கைகளை ஒருங்கி ணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் உடனடியாக கவனம் செலுத்துவது மிகவும் அவ சியம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *