காவல்துறையின் மூடநம்பிக்கை குற்றங்கள் குறைய கோவிலுக்கு காவடியாம்!

viduthalai
1 Min Read

நாகர்கோவில், டிச.17- குற்றங்கள் குறைய வேண்டி கோவிலுக்கு காவல் துறையினர் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனராம்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது.
இந்த ஆண்டு 15.12.2023 அன்று நடந்த காவடி ஊர்வலத்தில் யானை கள் இல்லாததால் காவல் நிலையத்திலி ருந்து காவல் துறையினரும், பொதுப் பணித்துறை சார்பில் ஊழியர்களும் பால் குடத்தை தலையில் சுமந்தபடி தக்கலை பொதுப் பணித்துறை சார்பிலும், குற்றங்கள் குறைய வேண்டியும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் மக்கள் வாழ வேண்டியும் தக்கலை காவல் நிலையம் சார்பிலும் வேளிமலைமுருகன் கோவிலுக்கு
அதிகாரிகளும், காவல்துறையினரும் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் பசி, பட்டினி இன்றி வாழ வேண்டியும் காவடி எடுத்து செல்வது வழக்கம் என்று கூறிக்கொண்டு, அதன்படி 15.12.2023 அன்று தக்கலை காவல் நிலையம் சார்பில் 2 புஷ்ப காவடி யும், ஒரு பால் குடமும் எடுக்கப் பட்டதாம். விரதமிருந்த காவல்துறையினர் காவடிகளை தோளிலும், பால் குடத்தை தலையிலும் சுமந்த படி செண்டை மேளம் முழங்க சென்றன ராம். இப்படியும் ஒரு மூடநம்பிக்கை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *