செட்டிநாடு அரண்மனையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு
காரைக்குடி அருகே உள்ள (கானாடுகாத்தானில்) இராஜா சர்.அண்ணாமலை அரசர். இராஜா சர்.எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆகியோரின் “செட்டிநாடு அரண்மனை பங்களாவை” பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் அவரது வாழ்விணையர் திருமதி மோகனா அம்மையார் ஆகியோருக்கு “குமாரராணி” மீனா முத்தையா ஆச்சி அவர்களின் அறிவுறுத்தலின்படி, அவரது குடும்ப நண்பர் தே. வயிரவன் சிறப்பான வரவேற்பு அளித்து மாளிகையை சுற்றி காண்பித்தார்கள். உடன்: மாவட்ட தி.க. காப்பாளர் காரைக்குடி சாமி. திராவிடமணி கழகச் சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, ஜா.எ. டார்வின் தமிழ் ஆகியோர் உள்ளனர். (நாள்: 15.12.2023)
திருச்சி வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாவட்ட கழகத்தின் சார்பில் இனிப்புகள்
வழங்கப்பட்டது.
தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.