புதுடில்லி, டிச.16 மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வராக கருத்தப்படும் லலித் மோகன் ஜா 14.12.2023 அன்று கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அத னைத் தொடர்ந்து அவர், டில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக் கப்பட்டார். இதனிடையே, கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண டைவதற்கு முன்பு, லலித் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 14.12.2023 அன்று லலித் ஜாவை கைது செய்து விசாரணை நடத்திய டில்லி சிறப்பு காவல் துறையினர், 15.12.2023 அன்று அவரை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து லலித் ஜாவை 7 நாட்கள் சிறப்பு காவல் துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறையினர் 15 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மக்களவை அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த பின்னர் ராஜஸ்தானின் குச்சமன் நகரத்துக்குச் தப்பிச் சென்ற லலித் ஜா, அங்கு தனது நண்பர் மகேஷ் என்பவரைச் சந்தித்துள்ளார். அவர் லலித் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய் துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “மக்களவையில் அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த பின்னர், லலித் ஜா டில்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு பேருந்து மூலம் சென்றுள்ளார். அங்கு குச்சமன் நகருக்குச் சென்ற அவர், அங்கு ஒரு விடுதியில் இரவு தங்கியுள்ளார். ஆதாரங்கள் அனைத்தையும் அழித் துள்ளார். பின்னர் டில்லி வந்து காவல் துறையிடம் சரணடைந்துள்ளார்” என்று தெரிவித்தனர். மக்களவை அத்துமீறல் சம்பவத்தின் காட்சிப் பதிவுகளை அவரது நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். என்றாலும், அவரிடமிருந்து எந்த அலை பேசிகளையும் கைப்பற்றவில்லை. அவர் தனது நான்கு நண்பர்களின் அலைபேசி களையும் ராஜஸ்தானில் அழித்திருக்க லாம் என்று நம்பப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் மேனாள் அய்.ஏ.எஸ். பாண்டியன் போட்டியில்லை
கட்டாக், டிச.16 தமிழ்நாட்டைச் சோந்த மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிடமாட்டார் என்று அந்த கட்சி அறிவித்தது.
ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலராக 12 ஆண்டுகள் பணியாற்றிய பாண்டியன், முதல்வரின் நம்பிக்கைக்குரிய வராகவும் ஒடிசா அரசில் செல்வாக்கு மிகுந்த அதிகாரியாகவும் விளங்கினார். 49 வயதாகும் அவர் கடந்த அக்டோபரில் விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து, நவம்பர் மாதம் முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். இதை யடுத்து, அவர் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புவனேசுவரத்தில் 15.12.2023 அன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர்தேவி பிரசாத் மிஸ்ரா கூறிய தாவது:
வரும் தோதலில் போட்டியிடப் போவதில்லை என்று கூட்டத்தில் பாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் போட்டியிடுவதாக முடிவெடுத்தி ருந்தாலும் எவ்வித பிரச்சினையும் ஏற் படாது. ஒடிசா மக்களுக்காக முழுமை யாகப் பாடுபடப் போவதாக அவர் ஏற்கெனவே உறுதிபூண்டுள்ளார். பாண் டியனைப் பற்றி தேவையற்ற வதந்திகளைப் பரப்புவோர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் 2000-ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். பிரிவைச் சோந்தவர். தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அய்.ஏ.எஸ். அதிகாரியான அவருடைய மனைவி ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி வந்த நிலையில், அந்த மாநிலத்துக்கு அவர் பணயிடமாற்றம் பெற்றார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக திகழ்ந்த பாண்டியன், பின்னர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அவரது கட்சியில் இணைந்தார்.