தேர்தல் ஆணையர்கள் தலையாட்டி பொம்மைகளா? அம்பேத்கர் கருத்தை சுட்டிக்காட்டி திருச்சி சிவா பேட்டி

1 Min Read

புதுடில்லி, டிச. 13-தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா மாநிலங்களவையில் நேற்று (12.12.2023) நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலங் களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் என்பது யாருக்கும் கட்டுப்படாமல் சுயமாக இயங்க வேண்டிய ஒரு அமைப்பு ஆகும். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனத்தில் இவ்வளவு காலம் இருந்த நிலையை மாற்றி புதிய தேர்வுமுறையை கொண்டுவந்து அதற்கான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி உள்ளனர். பெரும்பான்மை காரணத்தால் இது மக்களவையிலும் நிறைவேறும். பிரதமர் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஒருவரைக்கொண்ட தேர்வுக் குழுவுக்கு ‘ஆமாம்’ என தலையாட்டுபவர்களையே தேர் தல் ஆணையர்களாக அமர்த்தும் நிலை ஏற்படும். இதை அம்பேத்கர், அரசியல் சட்ட நிர்ணயசபையில் பேசும் போதே சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற பொறுப்புகளுக்கு தலையாட்டிகள் வந்துவிடக்கூடாது என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறியது நடைமுறைக்கு வந்துவிடும் சூழல் உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *