அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலை செய்ய தூண்டிவிட்டார் என்று வதந்திபரப்பிய தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் விசாரணைக்கு வர ஆணை!

1 Min Read

சென்னை, அக் 25- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமத்துவத்தை எதிர்க்கும் ஸநாதனத்தை ஒழிப்போம் என்று கூறியதை இனப்படுகொலை நடத்த தூண்டினார் என்று செய்தி வெளியிட்ட வழக்கில் விசாரணைக்கு வருமாறு ஆங்கில தொலைக்காட்சி ஆசிரியருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸநாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து ஆங்கில தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியர் அபிஜித் மஜும்தார் கட்டுரை எழுதியிருந்தார்.

அதில், உதயநிதி ஸ்டாலின் சொல்லாத சொற்களை தானகவே கற்பனையாக சேர்த்து உதயநிதி ஸ்டாலின் மேடையில் இனப்படுகொலை செய்ய தூண்டி விட்டுள்ளார்.

ஸநாதனிகளை ஒழித்துக்காட்டும் அவரது பேச்சு நாட்டில் உள்ள ஹிந்துக்களை கொலை செய்ய தூண்டும் சொல் ஆகும் என்று எல்லாம் தானாகவே கற்பனையாக சேர்த்து செய்தி வெளியிட்டார் என்பதால் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிஜித் மஜும்தார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 8ஆம் தேதி, சென்னை சைபர் கிரைம் காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *