முக்கிய அறிவிப்பு ஆதாரில் திருத்தம் செய்ய 4 நாள்கள் மட்டும் இலவசம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.11- ஆதாரில் திருத்தங்களை வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக மேற்கொள்ள முடியும். அதன் பின்னர் இலவச சேவை நிறுத்தப்பட உள்ளது.
ஆதார் அட்டை மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் அதனைக் கட்டாய மாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை இந்த சேவைகளை இலவசமாகவே செய்து கொள்ளலாம். ஆனால் அதன் பின்னர் இந்த சேவை களுக்கு கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆதார் அட்டையில் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் இணையம் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. ஹிமிஞிகிமி ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும்.
நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த மாற்றங்களைச் செய்ய கட்டணம் இல்லை. இணையம் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மய்யத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் myAadhaar பக்கம் மூலம் எளிதாக முகவரியை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி முகவரியை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.

இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை இணையம் வழியாக இலவசமாக பெற முடிந்தது. ஆனால், இச்சேவை இனி இலவசம் கிடையாது. இனி கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இதை பெற இன்னும் 4 நாள்கள் மட்டுமே உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *