கொட்டினால்தான் தேள்!

1 Min Read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதி பெறாமல் கட்டடங்கள் 

தீட்சிதர்கள் மீது வழக்கு!

சென்னை, டிச. 3- கடலூர் மாவட்டம், சிதம்பரம், அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி வல்லுநர் குழு மற்றும் ஆணையர் அனுமதி பெறாமல் பழமையான கட்டங்களை அகற்றி புதிய கட்டடங்கள் பொது தீட்சிதர்களால் கட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணைய ரால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்கண்ட மனு நீதியரசர்கள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு 1.12.2023 அன்று வரப்பெற்றது.

விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் என்.ஆர்.ஆர்.அருண் நட ராஜன், அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் கட்டுமானங்கள் குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதற்கு பொது தீட்சி தர்கள் சார்பில் ஆஜரான வழக் குரைஞர் மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாது என உத்தரவாதம் அளித்ததை பதிவு செய்து கொண்டு வழக்கின் விசாரணையை எதிர்வரும் 6.12.2023 தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *