திருப்பூர், ஏப். 19– தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆதரவினை தெரிவிக்கிறது என அதன் பொதுச் செயலாளர் டி.சி.சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:–
திருப்பூர் மாவட்ட மிகவும் பிற்படுத் தப்பட்டோர் (MBC) கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் 17.4.2026 அன்று திருப்பூரில் மாநில பொதுச் செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பில் MBC உள்ள சமுதாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் வருகிற 2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் “சமூக நீதியை கடைப்பிடிக்கின்ற தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், MBC கூட்டமைப்பில் உள்ள சமு தாயத்தினர் தவறாமல் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இவ்வாறு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.சி.சேகர் தெரி வித்துள்ளார்.

