சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் மேலும் இராண்டாண்டுகள் நீட்டிப்பு:

Viduthalai
1 Min Read

சென்னை, டிச. 2- தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் 23.12.2023 அன்றுடன் முடிவடையும் நிலையில், இக்குழுவின் அவசியம் கருதி, இக்குழுவின் பதவிக் காலத்தினை தற்போதிருக்கும் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசாணை (ப) எண்:02 சமூக சீர்திருத்தத்துறை, நாள் 24.12.2021இல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட பணியிடங் களுடன் எவ்வித மாற்றமுமின்றி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யலாம் என்று கருதி அவ்வாறே அரசு ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பேராசிரியர்சுப.வீரபாண்டியன் தலைவ ராகவும், முனைவர் கே.தனவேல், இ.ஆ.ப.(ஓய்வு),  பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் முனைவர் ஆர். இராஜேந்திரன், கோ.கருணாநிதி, மருத்துவர் சாந்தி ரவீந்திர நாத் ஆகியோர் உறுப்பினர் களாகவும் தொடர்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *