நூல் வெளியீட்டு விழா

1 Min Read

 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழா
நூல்களின் வெளியீட்டு விழாவை சிறப்புடன்‌ நடத்துவோம் 
நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருநெல்வேலி, டிச. 1- திருநெல்வேலி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 அன்று மாலை மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்டச் செயலாளர் இரா. வேல்முருகன் விளக்க உரை ஆற்றினார்.  மாவட்டக் காப்பாளர் இரு.காசி, நெல்லை பகுதி கழகத் தலைவர் ந.மகேஷ்,  தச்சநல்லூர் பகுதித் தலைவர் இரா.கருணாநிதி,  சேரன்மகாதேவி ஒன்றிய தி.க. தலைவர் செல்ல சுந்தர சேகர், மாவட்ட மாணவர் கழகத் தலை வர் செ.சூர்யா, ‌மாநகரப் பகுத்தறி வாளர் கழகத் தலைவர். 

முரசொலி இரா.முருகன், தென் கலம் நகரத் தலைவர் வா.அய்யப் பன், நகரச் செயலாளர் கு.வெள் ளைத்துரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்.

நெல்லை பகுதிச் செயலாளர் மாரி கணேஷ் நன்றியுரை கூறினார்.

கூட்டத்தில் தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா கருத் தரங்கு நடத்துவது எனவும், ஆசிரி யர் பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாக்களை வழங்குவது எனவும், வாழ்வியல் சிந்தனைகள் 17 ஆம் பாகம், ஆசிரியர் அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா – விடுதலை மகளிர் மலர், விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் ஆகிய நூல்கள் வெளி யீட்டு விழாவையும் கருத்தரங்கு அன்று(2.12.2023) நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *