100 நாள் வேலை திட்டம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2697 கோடி விடுவிக்கப்பட வேண்டும்

Viduthalai
2 Min Read

ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

அரசியல்

சென்னை,அக்.28- தமிழ்நாட் டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங் கிய வேண்டும் என்று ஒன்றிய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். 

அதில், ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன் றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாகவும், குறிப்பாக விவசாயம் நலிவடைந்த பரு வத்தில், கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு கூடுதல் வாழ் வாதார வாய்ப்பாகவும் கருதப் படுகிறது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தத் திட்டத் தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங் கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்க ளின் நிதிநிலை மற்றும் வாழ் வாதாரம் பெரிதும் மேம்பட் டுள்ளதாகச் சுட்டிக்காட்டி யுள்ளார்.

தமிழ்நாட்டில், 2023-2024ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வும், 23-10-2023 வரை, 66.26 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 இலட்சம் தொழி லாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழ்நாடு 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளதாகவும் தனது கடி தத்தில் முதலமைச்சர் குறிப்பிட் டுள்ளார்.

2023-2024 நிதியாண்டில், 

19-7-2023 வரை, தொழிலாளர்க ளுக்கு திறன்சாரா ஊதியத்திற் காக ரூ.4,903.25 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதா கவும், அதனைத் தொடர்ந்து 

25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக ஒன்றிய அர சால் ஒப்பளிக்கப்பட்டுள்ளதா கவும் தெரிவித்துள்ள முதல மைச்சர், எனினும் அனுமதிக்கப் பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட் டுள்ள தாக வும், மீதமுள்ள ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை என்று தெரிய வந்துள்ள தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்திற் கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப் படவில்லை என்றும், 20-10-2023 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடி என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டி யுள்ளார்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17-10-2023 அன்று, செங் கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, வரவிருக்கும் விழாக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழி லாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடி யாக வழங்கிட வேண்டுமென்று பொது மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் தமக்கு வந்ததாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர் களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டு மென்று ஒன்றிய அரசைக் கேட் டுக் கொண்டுள்ளதோடு, திறன் சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக் கப்பட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வலியு றுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *