வைக்கம் கன்னட மொழி பெயர்ப்பு நூலை முதலமைச்சர் வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) தலைமைச் செயலகத்தில், பழ. அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன்,  வைக்கம் போராட்டம் நூல் ஆசிரியர் எழுத்தாளர்பழ.அதியமான், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் இரா. கஜலட்சுமி, மொழிபெயர்ப்புப் பிரிவு இணை இயக்குநர் டாக்டர். சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *