நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? – மம்தா குற்றச்சாட்டு

1 Min Read

அரசியல், இந்தியா

கொல்கத்தா, ஜன. 18- நீதிமன்றங்களின் செயல்பாட்டில் ஒன்றிய அரசு தலையிட முயற்சி செய்வதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். உயர்மட்ட நீதித் துறையில் நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கையை கொலீஜியம் அமைப்பு மேற்கொள்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுதியுள்ள கடிதத்தில், கொலீஜியம் அமைப் பில் அரசு நியமன உறுப்பினர்களை நியமிப்பதற்கான முன்மொழிவை தெரிவித்துள்ளார். அதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இது ஒரு புதிய வகையான திட்டமிடலாகும். உச்சநீதிமன்றத் தின் கொலீஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதித்துவம் இருந்தால், இயல்பாகவே மாநில அரசுகளும் தங்கள் பிரதிநிதிகளை கொலீஜியத்தில் சேர்க்கும். 

ஆனால் மாநில அரசுகளின் பரிந் துரைக்கு எந்த மதிப்பும் இருக்காது. கடைசியில், நீதித்துறை செயல்பாட்டில் ஒன்றிய அரசு தான் நேரடியாக தலையிடுவதாக இருக்கும். அதை நாங்கள் விரும்ப வில்லை. நீதித்துறை சுதந்திரமாகவே செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம்.’ என்று அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *