கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகள்தான் சிலைகளை கடத்துகின்றனர் : இரா.முத்தரசன்

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை,ஜன.23- கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகள் சிலைகளை கடத்துகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 

இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம் பாட்டு பிரிவினர் நடத்திய ‘போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜ தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ‘தமிழ் நாட்டில் பாஜ ஆட்சி அமைந் தால், இந்து சமய அறநிலையத் துறையை நீக்குவதற்கு தான் முதல் கையெ ழுத்து போடும்’ என வாய்ச் சவடால் அடித் துள்ளார். கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்களும், நிலங்களை உழுவடை செய்து வரும் குத்தகை விவசாயிகளும் தான் கோயில் சொத்துக்களை சேதாரம் இல்லாமல் பாது காத்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மத அடிப்படைவாதிகளும், சனாதான சக்திகளும் கடவுள் சிலைகளை கடத்துவது, நகை, பணம் போன்றவைகளில் கையாடல் செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமித்து வைத்துள்ள கோயில் சொத்துக்களை திமுக அரசு மீட்டு வரும் செய்தியால், ஆத்திரமடைந்த சுயநல சக்தி களின் உணர்வுகளை அண் ணாமலை பிரதிபலித்து, பகல் கனவு காண்கிறார். அவரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. தலைமுறை, தலைமுறையாக கோயில் மனைகளில் குடியிருந்து வருபவர்கள் மற்றும் கோயில் நில குத்தகை விவசாயிகள் நில உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனப் போராடி வரும் நிலையில்,  அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என்பது திசைதிருப்பும் உள் நோக்கம் கொண்ட வஞ்சகக் குரல் என்பது  இயல்பான ஆன்மிகவாதிகளுக்கு எளிதில் புரியும்  என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *