பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியரின் கடன் ரூ.1.09 லட்சம்

1 Min Read

புதுடில்லி, ஜன.26- பாஜக அரசின் 

9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.1.09 லட்சமாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் டில்லியில்   செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒன்றியத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.43,124 இருந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. 2014இல் இருந் ததைவிட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு கடன் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 9 ஆண்டில் மட்டும் ஒவ்வொரு இந்தியரின் கடன் ரூ.66,249 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 1947 முதல் மார்ச் 31, 2014ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் மொத்தக் கடன் ரூ.55.87 லட்சம் கோடியாக இருந்தது.

இது கடந்த 9 ஆண்டில் 2.77 மடங்கு அதிகரித்து ரூ.155.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *