இணைய தளத்தில் பதிவேற்றம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியானது

1 Min Read

இந்தியா

புதுடில்லி, ஜன.27- ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் நேற்று (26.1.2022) வெளியிடப்பட்டது. 

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. முதல் கட்டமாக தமிழ், ஹிந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகளை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (25.1.2023) உச்சநீதிமன்றத் தின் அலுவல்கள் தொடங்கியவுடன வழக்குரைஞர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1268 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதா கவும் குடியரசு நாளினை யொட்டி இந்தத் தீர்ப்புகள் வெளி யிடப்படும் என தெரிவித் தார்.

இதன்படி, நேற்று தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மண்டல மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளி யானது. 

தமிழில் -52, அசாம் – 4, ஹிந்தி – 1554, கன்னடம் – 17,  மலையாளம் – 29, மராத்தி – 14, ஒடியா – 21, பஞ்சாபி – 4, தெலுங்கு – 28, உருது -3 என தீர்ப்புகள் உச்சநீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.  மற்ற மொழிகளிலும் தீர்ப்புகளை மொழி பெயர்க்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *